அ.தி.மு.க.- பா.ஜனதா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.- பா.ஜனதா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைைய அடுத்த ஜாம்புவானோடையில் த.மா.கா. பிரமுகர் தட்சிணாமூர்த்தி உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது வீட்டுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நடத்தக்கூடிய சோதனை யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை. இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.- பா.ஜனதா உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம். தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை வலுப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.