குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்!

கேப்டன் விஜயகாந்த் தன் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரையுலக பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் விஜயகாந்தும் தங்கள் வீட்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு சந்தோஷம் ஏற்படவில்லை மாறாக அதிர்ச்சி ஏற்பட்டதுடன் கண்ணீரும் வந்தது. அதற்கு காரணம் விஜயகாந்தின் தோற்றம். சும்மா சிங்கம் மாதிரி கம்பீரமாக இருந்த மனிதர் சிறு பிள்ளை போன்று தெரிகிறார். பிரேமலதா, மகன்களுக்கு நடுவே விஜயகாந்தை பார்த்தால் அது கேப்டன் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஆள் மெலிந்து காணப்படுகிறார். அதை பார்த்து தான் ரசிகர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

விஜயகாந்தின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, எப்படி இருந்த மனிதர் இப்படியாகிவிட்டார். உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு கேப்டன். ப்ளீஸ் அண்ணி, இனியும் கேப்டனின் இது போன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டாம். சிங்கம் மாதிரி இருந்தவரை இப்படி பார்க்க ஒரு மாதிரியாக இருக்கு.

கேப்டனின் உடம்புக்கு என்ன தான் ஆச்சு?. நாளுக்கு நாள் உள்ளேயே போகிறார். தயவு செய்து அவருக்கு உரிய சிகிச்சை அளித்து கேப்டனை பழைய கேப்டனாக மாற்றுங்கள். கேப்டன் கஷ்டப்படுவதை இனியும் பார்க்க முடியாது. கேப்டனை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம். அவர் முகத்தையாவது முழுவதுமாக காட்டலாமே. அது ஏன் மாஸ்க் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் தானே அவர் அருகில் அமர்ந்திருக்கிறீர்கள். அதனால் மாஸ்க் தேவையா என தெரிவித்துள்ளனர். கேப்டன் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். அவர் பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டும். அதை நாங்கள் பார்த்து ஆனந்த கண்ணீர் விட வேண்டும். இது நிச்சயம் நடக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.