மகளிர் ஆணையம் வைரமுத்துவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்: எச். ராஜா!

சின்மயி குற்றச்சாட்டில் மகளிர் ஆணையம் வைரமுத்துவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திராவிட பேரியக்கம் எழுதியும் பேசியும் வளர்ந்த இயக்கம், பேச்சின் நடையும் எழுத்தின் இயக்கமும் வேறாக இருக்கலாம். ஆனால் பேசி பேசி எழுதி எழுதி வளர்ந்த இயக்கத்தில் இன்று பேச்சளார்களும் எழுத்தாளர்களும் குறைவாகி கொண்டிருக்கிறார்களோ என்ற வரலாற்று அச்சத்தில் தான் வாழ்வாதாக தெரிவித்தார். மேலும் தங்களுக்கு ஆசான்கள் வேண்டும் என்றும் அடுத்த தலைமுறைக்கு தமிழை கடத்த வேண்டும், பேச்சின் வழி, எழுத்தின் வழி, தொழில் நுட்பத்தின் வழி தமிழை கடத்த வேண்டும். அதற்கு பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் நவீன தொழில் நுட்பத்துக்கு கடத்த வேண்டும். கலைஞரின் புகழை பரபரப்ப வேண்டும். கலைஞர் விழா நடைபெறும் அரங்குகளில் கலைஞரின் மேற்கொள்களை குறிப்பிட வேண்டும் என்றார். மேலும் பெண்கள் இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே கிடைத்திருக்காது.. ஆனால், பெண்களே இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே தேவை இருக்காது என்ற பெர்னாட்ஷாவின் மேற்கோளை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வைரமுத்துவின் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ள எச். ராஜா, சின்மயி குற்றச்சாட்டின் அடிப்படையில் மகளில் ஆணையம் இவருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிரபல பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சின்மயி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக திமுகவினர் மற்றும் ரைமுத்துவின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சின்மயியைதான் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் வைரமுத்து திராவிட போராளி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என பாடகி சின்மயி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “10 மாவட்ட ஆட்சியர்களுக்கு ED சம்மன். தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகார வர்க்கம் முழுவதும் ஊழல் மயம். தமிழக அரசு தப்புவது கஷ்டம். நாட்கள் எண்ணப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.