அனிமல் படத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கிய ராஷ்மிகா!

அனிமல் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கோடிகளில் சம்பளம் வாங்கி உள்ளார். எ

கன்னட சினிமாவில் அறிமுகமாக தற்போது இந்தியா முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கக் கூடிய நடிகைகளின் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கென உருவாக்கினார். தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவர் இதுவரை வாங்காத சம்பளத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா. தற்போது வெளியாகி உள்ள அனிமல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கக்கூடிய பாசத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த திரைப்படம் மொத்தமாக 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடுகிறது.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடா என ஐந்து மொழிகளில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று உலகம் எங்கும் வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளே 116 கோடி வசூலை பெற்றது. தற்போது மூன்றாம் நாளில் 356 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் செய்துள்ளது.

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்க கூடிய ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நடித்த திரைப்படங்களில் மூன்று கோடி வரை சம்பளமாக ராஷ்மிகா மந்தனா வாங்கியுள்ளார். தற்போது நடித்துள்ள அனிமல் திரைப்படத்தில் ஆறு கோடி முதல் ஏழு கோடி வரை ராஷ்மிகா மந்தனா சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அனிமல் திரைப்படத்தின் மூலம் தனது சம்பளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கோடீஸ்வர நடிகைகளின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.