நான் ஆட்சிக்கு வந்தால் என்கிட்ட இருந்து நீ (மத்திய அரசு) ஜிஎஸ்டி வாங்கிருவியா?: சீமான்

“நான் ஆட்சிக்கு வந்தால் என்கிட்ட இருந்து நீ (மத்திய அரசு) ஜிஎஸ்டி வாங்கிருவியா? சென்ட்ரல்னா உனக்கு நான் கொடுக்கணுமா?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மிக்ஜாம் புயல் நிவராணத் தொகையாக ரூ.5000 கோடியை முதல்கட்டமாக வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசிடம் கேட்டிருந்தார். ஆனால், மத்திய அரசோ வெறும் ரூ.450 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஒரு தனியார் யூடியூப் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

இது என் நாடு. இங்க நான் தான் அதிபரு. நான் தான் பிரதமரு. நான் ஆட்சிக்கு வந்தால் என் மண்ணையும், மக்களையும் எப்படி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும். நான் செய்வேன். அவ்வளவு தான். நான் ஆட்சிக்கு வந்ததும் என்கிட்ட இருந்து நீ (மத்திய அரசு) ஜிஎஸ்டி வரி வாங்கிரு பாப்போம். நீ சென்ட்ரல்னா உனக்கு நான் வரி கொடுக்கணுமா? எனக்கு எதுக்கு சென்ட்ரலு? உனக்கு எதுக்கு நான் பணம் கொடுக்கணும்னு கேட்பேன். உன்கிட்ட என்ன இருக்கு? போக்குவரத்து இருக்கா? கல்வி இருக்கா? அப்புறம்.. அதானி, அம்பானி வாங்குன கடனை தள்ளுபடி பண்றதுக்கு நான் உனக்கு காசு கொடுக்கணுமாடா?

ஒன்னுமில்ல.. நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்த அறிக்கையை மட்டும் வெளியிட சொல்லு பாப்போம். நாடு முழுவதும் இத்தனை ஜிஎஸ்டி வரியை வாங்கிருக்கோம். இந்த நிதியில் என்னென்ன மக்கள் நலத்திட்டங்களை செஞ்சிருக்கோம்னு ஒரு அறிக்கையை வெளியிட சொல்லு பாப்போம். பண்ண மாட்டாங்க. என்னோட தமிழ்நாட்டை இந்தியாவுல வெச்சுறதுக்கு காரணமே இங்க இருக்குற வரிக்காகவும், வளத்துக்காகவும் தான். மொத்தமா சுரண்டி முடிச்சுட்டானு வெச்சுக்க, நம்மள விட்ருவான்.

பாஜக இல. கணேசன் சொல்லலையா.. மீத்தேன் எடுக்குறத எதிர்த்து செய்த போராட்டத்தின் போது அவர் என்ன சொன்னாரு.. நாடு நல்லா இருக்கணும்னா ஒரு மாநிலத்தை பலி கொடுக்கலாம்னு அவர் சொன்னாரா இல்லையா? உங்களுக்கு பலி கொடுக்குறதுக்கு என் மாநிலம் தான் கிடைச்சுதா? நான் இங்க ஆட்சில இருந்தா, இந்த வார்த்தையை நீங்க சொல்லிருவீங்களா? தேர்தல் ஆணையம் என்பது எவ்வளவு அதிகாரம் மிக்கது என்பது எங்க ஐயா சேஷன் வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது. சபாநாயகர் பதவி என்றால் என்ன என்பது எங்க ஐயா பி.எச். பாண்டியன் வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது. அதே மாதிரி, முதல்வர்னா யாருங்குறது நான் வந்ததற்கு பிறகு தான் தெரியும். இவ்வாறு சீமான் கூறினார்.