மாடர்ன் தியேட்டர்ஸ் இத்தனை வருடங்கள் கழித்து திமுகவின் கண்ணை உறுத்துகிறது: கஸ்தூரி!

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கட்டப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் இத்தனை வருடங்கள் கழித்து திமுகவின் கண்ணை உறுத்துவதாக நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சேலம்-ஏற்காடு சாலையில் 1935 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரத்தால் தொடங்கப்பட்டது மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ. தென் இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பெரிய ஸ்டுடியோவும் இதுதான். இந்த ஸ்டுடியோவில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா மற்றும் சிவாஜி கணேசன், கண்ணதாசன் உள்பட தமிழ் சினிமாவின் பல திரை பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர்.

1982 ஆம் ஆண்டு வரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா படங்களையும் தயாரித்து வந்தது. தற்போது அங்கு நுழைவு வாயிலுடன் சிறிய இடம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தபோது, நுழைவுவாயில் அருகே செல்ஃபி எடுத்து மகிந்துள்ளார். இந்நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்றும் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத் துறையால் நுழைவு வாயிலின் உட்பகுதியில் முட்டுக்கல் நடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வைரலானது. டுவிட்டரில் முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் ஹேஷ்டேக்குகளும் ட்ரென்ட்டானது.

இந்த விவகாரம் குறித்து அந்த இடத்தின் உரிமையாளரான வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயவர்மன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அந்த நுழைவு வாயிலை முதல்வர் ஸ்டாலின் விலைக்கு கேட்டது, அவர் விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியது அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கூறினார். இதனால் இந்த விவகாரம் மேலும் பூதாகரமானது.

இந்நிலையில் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி சேலத்துக்காரர் வாழப்பாடி சுகந்தன் ஷேர் செய்துள்ள பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ள கஸ்தூரி, சுதந்திரத்துக்கு முன்னாடியே கட்டப்பட்ட நுழைவு வாயில். இத்தனை வருடம் கழித்து இன்று திமுக அரசின் கண்ணை உறுத்துகின்றது. மந்திரிக்குமாரி உள்ளிட்ட கலைஞரின் பல வெற்றிகளை தினம்தோறும் பறை சாற்றும் நினைவு வாயிலை விட.. என குறிப்பிட்டு சாடியுள்ளார்.