தனுஷ் படம் மூலமாக ஹீரோயினாகும் அனிகா சுரேந்திரன்!

தனுஷ் தற்போது தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பின்னர் துவங்கப்பட்ட இப்படத்தின் ஷுட்டிங்கை அண்மையில் முழுவதுமாக நிறைவு செய்தார். இந்நிலையில் ‘D50’ படத்தினை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் தனுஷ். இப்படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். சமீப காலமாக இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் இவர், தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகவுள்ள படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் தனுஷ். இதில் தனது அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்பபடுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தில் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மையில் சரத்குமாரின் குடும்பத்துடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவின.

மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிகா குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் மற்றும் மாமனிதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தனுஷ் இயக்க போகும் படம் மூலமாக தமிழில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.