பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

பிகாா் மாநில முன்னாள் முதல்வர் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் கர்பூரி தாக்குரின் 100வது பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் தாமதமான முடிவினை வரவேற்கிறேன்.

இதேபோல தலித் மக்களின் சுயமரியாதைக்காக போராடிய கன்ஷிராமின் பங்களிப்பும் மறக்க முடியாதது. அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.