தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பிரியங்கா பேசியிருக்கிறார்!

விஜே அர்ச்சனா சமீபத்தில் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் கலந்து கொண்ட பிரியங்கா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா எப்போதும் சிரித்த முகமாக இருந்தாலும் அவருடைய திருமண வாழ்க்கை நினைச்ச மாதிரி இல்லை என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் பிரியங்கா பேசியிருக்கிறார். அதோடு தனக்கு சில கனவுகளும் ஆசைகளும் இருக்கிறது என்றும் அதில் வெளிப்படையாக பிரியங்கா பேசியிருக்கிறார்.

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் அதிகமான நிகழ்ச்சிகளில் இடம் பிடிக்கும் ஒரு தொகுப்பாளினியாக பிரியங்கா இருந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி தன்னை எல்லோரும் கலாய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஜாலியாக அந்த இடத்தை மாற்றி விடுவது தான் பிரியங்காவின் சிறப்பு. இந்த நிலையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா தன்னுடைய யூடியூப் சேனலில் தொடங்கி இருக்கும் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அர்ச்சனாவும் பிரியங்காவும் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியங்கா சில தனிப்பட்ட சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தப்பான முடிவு எடுத்துட்டேன். இனிமேல் என்னுடைய லைஃப்ல எடுக்கப் போற பெரிய முடிவுகளால் அம்மாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன். நான் போட்டு வச்சிருக்கிற பிளானை ஒவ்வொரு விஷயத்திலும் நிறைவேற்றிவிட்டு வருகிறேன்.

ஆரம்பத்தில் நான் பிக்பாஸுக்கு போனும் என்று நினைத்தேன். அதுபோல போய்விட்டேன். கார் வாங்குறது மாடி வீடு கட்டுவது அப்படி ஒவ்வொரு விஷயமா நான் நினைத்ததை செய்து கொண்டு வருகிறேன். இப்போ கொஞ்ச நாளா ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறேன். அதுபோல எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது எனக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு. அது போல என்னை யாராவது பயங்கரமா லவ் பண்ணனும்.. இந்த மாதிரி விஷயங்கள் நடக்காதா என எனக்கும் ஏக்கமா இருக்கு. என்னுடைய தம்பி குழந்தையை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும். அந்த குழந்தையோட விளையாடும் போது நான் ரொம்ப நிம்மதியா இருக்கிறேன். அந்த குழந்தை தான் என்னோட சந்தோஷமா இருக்கு. அந்த குழந்தைக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். அந்த குழந்தையோட சிரிப்புதான் எனக்கு சந்தோஷம், நிம்மதி எல்லாத்தையும் என் வீட்டுல திரும்ப கொண்டு வந்து இருக்கு. கடவுள் தான் எனக்கு அந்த குழந்தையை அனுப்பி வைத்திருக்கிறார். அவளை பார்க்கும் போது நான் என்னையே பார்க்கிற மாதிரி இருக்கும். நான் சின்ன வயசுல எப்படி இருந்தேனோ அப்படித்தான் அவளும் இருக்கா…. அதற்காக அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்று பிரியங்கா எமோஷனலாக பேசியிருக்கிறார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.