சூர்யா – 44 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே!

சூர்யா – 44 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்க உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராமும் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.