ஈரானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பலி!

ஈரானில் பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரத்தில் இருந்து, யாஸ்ட் நகரத்திற்கு பயணியர் ரயில், நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தபாஸ் நகரை கடந்தவுடன், எதிர்பாராதவிதமாக ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சிக்கி, 22 பேர் உயிரிழந்தனர்; 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.