செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, உடல்நலம் முழுமையாக தேறிய பிறகு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அதிலிருந்து அவா் சிறையில் இருந்து வருகிறாா்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) முடிவடைவடைந்தது. இதனால், புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதனமை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 19-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.