நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கும், இயக்குனர் ஜேஎஸ்கே சதீஷ்க்கும் வார்த்தை போர்!

‘பயர்’ படம் தொடர்பாக பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி, தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜேஎஸ்கே சதீஷ் இருவருக்கும் இடையில் சோஷியல் மீடியாவில் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சீரியல்கள் பலவற்றில் நடித்த இவர், விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ரச்சிதா மகாலட்சுமி, ‘பயர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தொடர்பாக தயாரிப்பாளருக்கும், ரச்சிதா மகாலட்சுமிக்கும் இடையில் சோஷியல் மீடியாவில் வாக்குவாதம் நடந்து வருவது பரபரப்பை கிளப்பி வருகிறது.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஜேஎஸ்கே சதீஷ் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘பயர்’. பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலாஜி முருதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட சம்பளம் கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு விலக போகிறேன் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் தீயாய் பரவியது. இது படத்திற்கான ப்ரோமோஷனாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் ‘பயர்’ படத்தில் நடித்துள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி, பாலாஜி முருகதாஸ் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, இந்த ஏமாற்று இடத்தில் இருந்து நான் முன்பே வெளியேறி விட்டேன். உங்களுக்கு இப்பொழுது தான் தெரிகிறது. ஆனாலும் பரவாயில்லை. இனி நான் தனியாள் கிடையாது. எனக்கு ஒரு துணை கிடைத்து விட்டது.

’நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்க வேண்டாம். தன்வினை தன்னைச் சுடும். நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்வதற்கே அருகதையற்றவர்’ என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜேஎஸ்கே சதீஷை டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரச்சிதாவின் குற்றச்சாட்டிற்கு எதிராக சதீஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘வணக்கம் ரச்சிதா’ நீங்க நடிச்சததான் உங்கள் பிறந்தநாளுக்கு கிளிம்ஸ் ஆக போட்டிருக்கேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல. இன்னும் படம் வெளியே வரும் போது நீங்க நடித்த காட்சிகள் எல்லாம் வெளியில் வரும். நீங்கள் சம்பளம் வாங்கிவிட்டு தான் நடிச்சுருக்கீங்க. இனாமாக நடிச்சு கொடுக்கலை. அதற்கு அக்ரீமெண்ட் என் கையில் இருக்கிறது. நீங்கள் பணம் வாங்கியதற்கு ஆதாரமும் என் கையில் இருக்கிறது. அதனால் உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க. தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடுற மாதிரி ஆயிடும். மதுரை வினையும் பிக் பாஸ் வினையும் தன்னைச்சுடும், குருவே சரணம். ஃபயர் படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள். அந்த படத்தை shit என்று விமர்சனம் செய்துள்ளீர்கள். அந்த ஷிட்டில் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்’. இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.