தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த்!

அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார் ரஜினிகாந்த்.

மும்பையில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கமல் நடித்துள்ள ‘இந்தியன்-2’ திரைப்படத்தை நாளை (இன்று) பார்க்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்தும், சட்டம்-ஒழுங்கு குறித்தும் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்டபோது, ‘நோ கமென்ட்ஸ்’ என கூறிவிட்டு சென்றார்.