நான் உணவை பார்க்கும் முறையே மாறிவிட்டது: நயன்தாரா!

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ்வாக இருக்கும் நயன்தரை தன்னுடைய உடல் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறது என்பது குறித்த சீக்ரெட்டை லேட்டஸ்ட் போஸ்ட் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

நானும் ரௌடிதான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்; வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அதற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் அவர்; அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகமானார். அவர் ஹிந்தியில் நடித்த முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் சில ஹிந்தி படங்களிலும் அவர் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக சமூக வலைதளங்களில் கணக்கு எதுவும் வைத்திருக்காத நயன்; ஜவான் பட சமயத்தில் தனக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓபன் செய்தார். அதில் தன்னுடைய படங்கள், குழந்தைகள், பயணங்கள், பிற தொழில்கள் உள்ளிட்டவை தொடர்பான போஸ்ட்களை அதிகம் போடுவார். மேலும் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா படத்தின் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு ஊதா நிற புடவை அணிந்து வந்த அவரை பார்த்த பலரும்; வயசானாலும் கிளாமர் குறையலையே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்தச் சூழலில் 39 வயதாகும் தனக்கு எப்படி உடல் இன்னமும் ஃபிட்டாக இருக்கிறது என்பது தொடர்பாக நயன்தாரா இன்ஸ்டாகிராமில் சீக்ரெட் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “டயட் என்றால் பிடித்தவற்றை சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அது அப்படி இல்லை என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும்போது தெரிந்தது. தற்போது வீட்டில் செய்த உணவை சத்தாகவும், சுவையாகவும் சாப்பிடுகிறேன். ரசித்து சாப்பிடுவதன் காரணமாக Junk உணவுகள் மீது எந்த ஏக்கமும் எனக்கு வருவதில்லை. நான் உணவை பார்க்கும் முறையே மாறிவிட்டது” என குறிப்பிட்டிருக்கிறார்.