நான் எல்லா பிறவியிலும் இதே அப்பா, அம்மாவுக்கு பிறக்கணும்: சோபிதா துலிபாலா!

சமந்தா நாயாகவோ அல்லது வேறு ஏதாகவோ பிறக்கட்டும். ஆனால் நான் ஒவ்வொரு பிறவியிலும் இதே அப்பா, அம்மாவுக்கு மகளாக பிறக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் சோபிதா துலிபாலா.

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதி ரொம்ப நல்ல நாளாக இருக்கிறது என அன்று அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து விட்டார்கள் பெற்றோர். நிச்சயதார்த்தம் நடந்துவிட்டாலும் இன்னும் திருமண தேதியை குறிக்கவில்லை. தேதி குறித்ததும் அவர்களே அறிவிப்பார்களாம். நிச்சயதார்த்தம் முடிந்ததில் இருந்து அடிக்கடி சோபிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தான் சோபிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தான் சிறு பிள்ளையாக இருந்தபோது அப்பாவுடன் எடுத்துக் கொண்ட மூன்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சோபிதா துலிபாலா கூறியதாவது:-

ஒவ்வொரு பிறவியிலும் என் அப்பா, அம்மாவுக்கு மகளாக பிறக்க வேண்டும். வேறு எதுவும் முக்கியம் இல்லை. என் தங்கை ஒரு நாயாகவோ அல்லது வேறு ஏதாகவோ வந்தாலும் சரி என்றார்.

சோபிதாவின் தங்கை வேறு யாரும் அல்ல சமந்தா துலிபாலா. நம்ம நடிகை சமந்தா இல்லை. சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தா, அவ்வளவு தான். அந்த தங்கை சமந்தா நாயாக பிறந்தாலும் பரவாயில்லை என்கிறார் சோபிதா.

அவரின் போஸ்ட்டை பார்த்த சிலரோ, நீங்கள் சொல்வது சரி. எங்களுக்கும் அப்படித் தான் என்கிறார்கள். மேலும் சிலரோ, என்ன ஒரு சுயநலம். நீங்கள் மட்டும் உங்க அப்பா, அம்மாவுக்கே பிள்ளையாக பிறக்கணும். தங்கச்சி மட்டும் எப்படி வேண்டுமானாலும் பிறக்கணுமா சோபிதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோபிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததில் இருந்தே சமந்தாவின் பெயர் அடிபடுகிறது. அது சோபிதாவின் தங்கை டாக்டர் சமந்தாவின் பெயர். இருந்தாலும் நடிகை சமந்தாவின் ரசிகர்களுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. சோபிதாவின் தங்கை சமந்தா காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு தான் அவருக்கும், டெல்லியை சேர்ந்த டாக்டர் சாஹில் குப்தாவுக்கும் திருமணம் நடந்தது. அக்கா இருக்க தங்கைக்கு திருமணமா என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் சோபிதாவுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.