படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகை சமந்தா!

படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகை சமந்தா, ஊசியை வைத்து சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

தென் இந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் உருவாகி வரும் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளின்போது இந்த படம் குறித்து அறிவித்தார் சமந்தா. கையில் துப்பாக்கி ஏந்தியவாறு சிவப்பு சேலை அணிந்து, கோபமான லுக்கில் சமந்தா பார்ப்பது போல் பங்காரம் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கதையின் நாயகியாக அவர் நடித்து வரும் இந்த படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளாராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அடுத்த ஆண்டில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பங்காரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் சமந்தா ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது காயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது காயத்துக்கு அவர் நீடில் (ஊசி) சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

தனது காயம் குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா, “காயம் இல்லாமல் நான் ஆக்‌ஷன் ஸ்டாராக மாற முடியுமா” என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவை தொடர்ந்து அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் ஆரோக்கியத்தில், உடல் நலத்தில் கவனம் செலுத்துமாறு கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே சமந்தா விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்பவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.