14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்தது. அத்துடன் அவர்களின் 3 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தது. 3 விசைப்படகு, 14 மீனவர்களை கைது செய்து பின்னர் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மீன்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும் கைது செய்வதும் தொடர்ந்து நிகழும் வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.