தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தீவுத்திடல் அருகே ஒன்றிய அரசின் Council for Leather Exports India தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் பெருநகர சென்னை மாநகர காவல்துறை சார்பில் Soles for Souls Marathon 2024 போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என்று நடைபெற்ற விழிப்புணர்வு மாராத்தானை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரொக்க பரிசுக்கான சான்றிதழை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 391 குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தடை செய்யப்பட்ட பாண் பராக், குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மிகச் சிறப்பாக தந்துள்ளார், உதயநிதி அவர்களுக்கு எப்பொழுது துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் மட்டுமல்ல திமுகவினரின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள். விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறையின் உலக அளவில் தமிழ்நாடு தலைமையகமாக மாற்றி தந்து உள்ளார்.

2 கோடி இளைஞர்களின் மிகப்பெரிய விழிப்புணர்வாக விளையாட்டுத்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கிறார். விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு நிதி தருவது மட்டுமல்லாமல், எழிமை நிலையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரிதியான உதவிகளையும் வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் சுற்றித்திரிந்து அரசின் திட்டங்களை மக்களுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்து சென்று கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி 40-க்கு 40 தொகுதி வெற்றி பெற்றோமோ அதுபோல் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.