அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கையில், உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. எனவே சாதாரண சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.