விரைவில் கார்த்தி – மாரி செல்வராஜ் கூட்டணியில் படம் அறிவிப்பு!

நடிகர் கார்த்தி, இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் கதையாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தற்போது, சர்தார் – 2 படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், வாழை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் – மாரி செல்வராஜ் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் அது உறுதியாகவில்லை. அதற்கு முன்பாக நடிகர் கார்த்தியை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதை மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்கள் இணையும் படத்தின் தயாரிப்பாளரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் இப்படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.