காங்கிரஸ் தலைவர் சோனியா உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார்!

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் நேர்முக உதவியாளராக இருப்பவர் பி.பி. மாதவன் (76). இவர் மீது 26 வயது இளம் பெண் கடந்த 25-ம் தேதி உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியுள்ளதாவது:-

நான் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு எனது கணவர் இறந்துவிட்டார். பின்னர் பி.பி. மாதவன் என்பவர் என்னிடம் நட்பாக பழகி திருமணம் செய்துகொள்வதாகவும் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி பல முறை பலாத்காரம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய போது மறுத்து என்னை ஏமாற்றி வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் இளம் பெண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பி.பி. மாதவன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாக உத்தம் நகர் இணை போலீஸ் கமிஷனர் கூறினார்.