உக்ரைனின் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா போர் விமானம் மூலம் குண்டு வீச்சு!

உக்ரைனின் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா போர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் மீது ரஷ்யா 129-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கிடையில், உக்ரைனின் எல்லையில் உள்ள கருங்கடல் பகுதியில் ஸ்னேக் தீவு உள்ளது. இந்த ஸ்னேக் தீவை போரில் ரஷ்யா கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ஸ்னேக் தீவில் இருந்து ரஷ்யா படைகளை கடந்த சில நாட்களுக்கு முன் திரும்பப்பெற்றது. இந்நிலையில், ஸ்னேக் தீவு மீது இன்று ரஷ்யா போர் விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுகோய் -30 ரக போர் விமானம் மூலம் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா ப்போஸ்போர்ன்ஸ் ரக குண்டுகளை வீதி தாக்குதல் நடத்தியது. ஸ்னேக் தீவில் இருந்து படைகளை விலகிக்கொண்டபோதும் அங்கிருந்து அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்பப்பெற முடியாததால் அதை ரஷ்யா குண்டு வீசி அழித்திருக்கலாம் என உக்ரைன் பாதுகாப்பு படை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.