அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான்: செங்கோட்டையன்!

அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான். விட்டுக்​கொடுக்​கும் மனப்​பான்​மையோடு இருக்​கும் என்னை சோதித்​துப் பார்க்​காதீர்கள் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி​யில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்சர் கே.ஏ.செங்​கோட்​டையன் பேசி​ய​தாவது:-

நான் பல்லாண்​டு​களாக அரசி​யலில் இருக்​கிறேன். பல தலைவர்களை சந்தித்​துள்ளேன். என்னை யாரும், எதிலும் சிக்​கவைக்க முடி​யாது.எம்ஜிஆர், ஜெயலலிதா பாதை​யில் செல்​லும் எனக்கு, அவர்​கள்​தான் வழிகாட்​டிகள். அதிமுக தொடங்​கப்​பட்​ட​போது நான் சாதாரண தொண்​டன். எனக்கு பொருளாளர் பதவியை வழங்கி, பொதுக்​குழுவை நடத்​து​மாறு கூறியவர் எம்ஜிஆர். அவரது உத்தர​வின் பேரில் நாங்கள் பச்சை குத்​திக் கொண்​டோம். எம்ஜிஆருடன் 14 முறை தமிழகம் முழு​வதும் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளேன். கிராமம் வாரியாக அத்தனை நிர்​வாகிகள் பெயரும் எனக்​குத் தெரி​யும்.

அத்திக்​கட​வு-அ​விநாசி திட்ட விழா​வில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாத​தால்​தான் நான் கலந்து கொள்ள​வில்லை. இதைப்​பற்றி ஏதேதோ பேசுகிறார்​கள். நான் கேட்​காமலேயே என் வீட்டுக்கு போலீஸ் பாது​காப்பு போட்​டார்​கள். நான் நேர்​மையான பாதை​யில், தன்னலம் ​கரு​தாது பாடு​படு​கிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு வந்த​போதும், அதுகுறித்து நான் அக்கறை​காட்​ட​வில்லை. அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான். இதை மறந்து என்னை சோதிக்​காதீர்​கள். நான் தெளிவாக​வும், தெளிந்த சிந்​தனையோடும் இருக்​கிறேன். விட்டுக்​கொடுக்​கும் மனப்​பான்​மையோடு இருக்​கிறேன். இதை மறந்து விடக்​கூடாது.

ஜெயலலிதா விரலசைவுக்கு ஏற்ப செயல்​பட்​டவன் நான். ’எந்த பணியைக் கொடுத்​தா​லும் வெற்றிகரமாக முடிக்கக் கூடிய​வர், விசுவாச​மானவர் செங்​கோட்​டையன்’ என்று ஜெயலலிதா என்னைப் பாராட்​டி​யுள்​ளார்​. தொண்​டனோடு தொண்​டனாக இருந்து பணியாற்றக் கூடிய​வன். என்றைக்​கும் தலைவராக வேண்டுமென கருதி​ய​தில்லை. இவ்வாறு அவர் பேசினார்.