திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை!

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று நாகை மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று (ஞாயிற்றுகிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.