இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது: அமித் ஷா!

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் கூறியதாவது:-

உலக நாடுகளுடம் ஒப்பிடும்போது இந்தியா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நமது அண்டை நாடுகளில் உள்ள நிலைமையைக் காட்டிலும் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

சுரங்கத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் கனிமங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுரங்க ஏலத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்துள்ளதுள்ளதால், மத்திய அரசு ஊழலுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.