சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பங்கு இல்லை: விக்ரம் மிஸ்ரி!

இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான சண்டை நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் பங்கு எது​வும் இல்லை என்று மத்​திய வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி கூறி​யுள்​ளார்.

பாது​காப்பு தொடர்​பான நாடாளு​மன்ற குழு முன் வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி நேற்று மாலை ஆஜராகி ‘ஆபரேஷன் சிந்​தூர்’ குறித்து விளக்​கம் அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது:-

இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான மோதல் வழக்​க​மான ஆயுதங்​களை கொண்ட மோதலாகவே இருந்​தது. பாகிஸ்​தானிடம் இருந்து அணுசக்தி சமிக்ஞை எது​வும் இல்​லை. பாகிஸ்​தானில் உள்ள விமானப் படை தளங்​களை நாம் தாக்கி சேதப்​படுத்தி விட்​ட​தால் எச்​கியூ-9 ஏவு​கணை பாது​காப்பு அமைப்பு உட்பட சீனா​வின் ஆயுதங்​களை பாகிஸ்​தா​னால் பயன்​படுத்த முடிய​வில்​லை.

பாகிஸ்​தானுடன் ஏற்​பட்ட சண்டை நிறுத்த உட்ன்​பாட்​டில் அமெரிக்​க​வின் பங்கோ அந்​நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்​பின் பங்கோ எது​வும் இல்​லை. லாகூரில் உள்ள எச்​கியூ-9 வான் பாது​காப்பு சாதனங்​கள், முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நூர் கான் விமானப் படை தளம் உட்பட பாகிஸ்​தானின் ராணுவ தளங்​களை இந்​திய ராணுவம் தாக்கி சேதப்​படுத்​தி​யது. இதையடுத்து மே 10-ம் தேதி பிற்​பகல் டெல்​லி​யில் உள்ள இந்​திய ராணுவ நடவடிக்​கைகளுக்​கான இயக்​குநரை பாகிஸ்​தான் ராணுவ நடவடிக்​கைகளுக்​கான இயக்​குநர் தொடர்பு கொண்டு சண்டை நிறுத்த கோரிக்​கையை முன்​வைத்​தார். எனவே இதில் மூன்​றாம் தரப்பு மத்​தி​யஸ்​தம் எது​வும் இல்​லை.

இந்​தி​யா​வின் 5 ஜெட் விமானங்​களை பாகிஸ்​தான் சுட்டு வீழ்த்​தி​ய​தாக வந்த தகவல்​கள் குறித்து கேட்​கிறீர்​கள். தேசப் பாது​காப்பு கட்​டுப்​பாடு​கள் காரண​மாக இது தொடர்​பாக கருத்து தெரிவிக்க இயலாது. இவ்​வாறு விக்​ரம் மிஸ்ரி தெரி​வித்​தார்.

இந்​தியா – பாகிஸ்​தான் இடையே சண்டை நிறுத்​தம் ஏற்பட உதவிய​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவரும் நிலை​யில்​ அதனை விக்​ரம்​ மிஸ்​ரி திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளார்.