காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாகி வீடு திரும்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இவருக்கு 78 வயது ஆகிறது. சோனியா காந்தி தற்போது தனது மகளும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியுடன் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ளார். பிரியங்கா காந்திக்கு சிம்லா அருகே பங்களா உள்ளது. சிம்லாவின் புறநகர் பகுதியான சாராபிராவில் பிரியங்கா காந்தியின் பங்களா உள்ளது. அங்கு தான் சோனியா காந்தி தங்கியிருக்கிறார். சோனியா காந்தி டெல்லியில் வசித்து வந்தாலும் கூட தற்போது அடிக்கடி சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவில் வசித்து வருகிறார். தற்போது சிம்லா சென்றுள்ள சோனியா காந்திக்கு திடீரென்று இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது மகள் பிரியங்கா காந்தியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக பிரியங்கா காந்தி, தாய் சோனியா காந்தியை சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டது. சோனியா காந்தி உடல்நலம் தேறினார். இயல்பு நிலைக்கு சோனியா காந்தி வந்தார். அதன்பிறகு சிறிது நேரத்தில் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக இமாச்சல் பிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான் கூறுகையில், ‛‛ உயர் ரத்த அழுத்தம் காரணமாக சோனியா மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது வழக்கமான பரிசோதனைகள் தான். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்” என்றார்.