பாஜக​வின் அதி​கார மிரட்​டல்​களை சமாளிக்க முடி​யாத இபிஎஸ் அவதூறு பரப்புகிறார்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

பாஜக​வின் ஆட்சி அதி​கார மிரட்​டல்​களை​ சமாளிக்க முடி​யாமல் திணறும் பழனி​சாமி அதை மடை​மாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியுள்ளதாவது:-

பழனி​சாமி ஆட்​சி​யில் பெண்​களுக்கு எதி​ராக பாலியல் குற்​றங்​கள் நிகழ்ந்​தால், குற்​ற​வாளி​களுக்கு ஆதர​வாகச் செயல்​பட்​டு, பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் குடும்​பத்​தையே தாக்கி மிரட்​டும் சூழல் நில​வியது. தனது ஆட்​சி​யில் நடந்த குற்​றச் சம்​பவங்​களை மறந்​து​விட்டு திமுக ஆட்​சி​யில் நடக்​கும் குற்​றங்​களை பூதாகர​மாகப் பேசுகிறார்.

பெண்​கள் முன்​னேற்​றத்​துக்​காக பல்​வேறு திட்​டங்​களை​யும் செயல்​படுத்தி பெண்​கள் பாது​காப்​பில் சமரசமின்​றித் திமுக அரசு செய​லாற்றி வரு​வ​தால்​தான், இன்று இந்​தி​யா​விலேயே அதி​க​மாகப் பெண்​கள் வேலைக்​குச் செல்​வதும் பாதுகாப்பான மாநில​மாகவும் தமிழகம் திகழ்​கிறது. பொள்​ளாச்சி பாலியல் குற்​ற​வாளி​யான அதி​முக நிர்​வாகிகளுக்கு அடைக்​கலம் கொடுத்​துப் பாது​காத்த பழனி​சாமிக்​கு, முதல்வரை விமர்சிக்க தகு​தி​ இல்​லை.

அதி​முக ஆட்​சி​யில் மக்​களைச் சீரழித்த போதைப் பொருட்​களை இரும்​புக் கரம் கொண்டு அடக்கியது திமுக ஆட்சி. தனது கூட்​ட​ணிக்​குள் நடக்​கும் குஸ்​தி​யை​யும், பாஜக​வின் ஆட்சி அதி​கார மிரட்​டல்​களை​யும் சமாளிக்க முடி​யாமல் திணறும் பழனி​சாமி அதை மடை​மாற்ற வீண் அவதூறுகளைக் கொட்​டி​னால் அது மக்​கள் மத்​தி​யில் எடு​ப​டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.