ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல் மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் இலங்கையின் புதிய அதிபர் ரனில் விக்ரமசிங்கே 2007 ஆம் ஆண்டு தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவிற்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, 2007 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில், ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார உதவியை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதற்கு ஜப்பான் அளித்த பதிலில், இலங்கை நாட்டின் தலைவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டும், மக்களை புறக்கணிப்பதாலும், அதற்கான தண்டனையை அந்நாட்டு மக்கள் பெறக்கூடாது. எனவே உதவி வழங்குவதை நிறுத்த முடியாது என்று பதில் அளித்தது.