அத்துமீறி உள்ளே நுழைந்தால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்: கங்கனா ரனாவத்!

அத்துமீறி உள்ளே நுழைந்தால் சாகும் வரை சுடப்படுவீர்கள் என நடிகை கங்கனா ரனாவத் வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் நாயகியாகவும், ‘தலைவி’ படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான கங்கனா ரனாவத், தயாரிப்பாளராகவும் , விநியோகஸ்தராகவும் உள்ளார். இதன்மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார் கங்கனா ரனாவத். அரசியலிலும் தீவிரமாக உள்ள கங்கனா ரனாவத் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் சாடி வருகிறார் கங்கனா ரனாவத். சமீபத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் தன்னை ஸ்பை வைத்து கண்காணிப்பதாகவும் மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். அதாவது நடிகை கங்கனா ரனாவத் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டை பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் வீட்டிற்கு வெளியே கங்கனா ரனாவத் வைத்துள்ள அறிவிப்பு பலகை இடம்பெற்றுள்ளது. அதில் “வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.

மிரட்டும் வகையில் இந்த அறிவிப்பு பலகையை வைத்துள்ளார் கங்கனா. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் அறிவிப்பு பலகை வைப்பது சரியா என விளாசி வருகின்றனர்.