யாஷ் ஒரு சிறந்த மனிதர். நல்ல நணபர்: ஸ்ரீநிதி ஷெட்டி!

கே.ஜி.எப். படத்தில் ராக்கி பாயாக நடித்த யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. ராக்கிங் ஸ்டார் யாஷுடன் ‘கே.ஜி.எப்’ படத்தில் இணைந்து பணியாற்றிஎதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்தப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் கடந்தாண்டு வெளியான ‘கோப்ரா’ படம் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ரிலீசான இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். கன்னட திரையுலகில் பிசியாக நடித்து வரும் இவர் ‘கே.ஜி.எப்’ படத்தில் நடித்த போது யாஷ் அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் இனிமேல் யாஷுடன் இணைந்து நடிக்கக்கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் இணையத்தில் தீயாய் செய்திகள் பரவியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சமூக ஊடகங்களை சிலர் தவறான தகவல்களை பரப்புவதற்காகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த பயன்படுத்துகிறேன். ராக்கிங் ஸ்டார் யாஷுடன் ‘கே.ஜி.எப்’ படத்தில் இணைந்து பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். யாஷ் ஒரு சிறந்த மனிதர். நல்ல நணபர் மற்றும் என்னை ஊக்குவிப்பவர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யாஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. யாஷ் ஒரு ஜென்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் ராக்கிங் ஸ்டார் யாஷின் ரசிகையாகவே இருப்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் யாஷ் குறித்து இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.