தங்கலான் எனக்கு மிகவும் முக்கியமான திருப்பத்தை கொடுத்துள்ளது: பார்வதி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வந்தது. பெரும் பொருட் செலவில் இந்தப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘அண்மையில் எனது நெருங்கிய நண்பர் ஒரு வாசகத்தை அனுப்பினார். ‘தங்கலான்’ படத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தை ஒரே வரியில் சிறப்பாக கூற இதை விட ஒரு வாசகம் கிடைக்காது. பணம், புகழ், காதல் இவற்றை தவிர எனக்கு உண்மையை தாருங்கள். ‘தங்கலான்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள், நான் சென்ற இடங்கள். எனக்குள் எழுப்பியிருந்த சுவர், முகத்திரைகளை சுக்குநூறாக உடைத்து கடைசியில் உண்மையை மட்டும் எஞ்ச வைத்தது. இப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திருப்பத்தை கொடுத்துள்ளது’ என பதிவிட்டுள்ளார் பார்வதி.