இந்தோனேசியாவில் 4 டிகிரி குளிரில் ஐஸ் பாத் எடுத்த சமந்தா!

இந்தோனேசியா சென்றிருக்கும் நடிகை சமந்தா 4 டிகிரி செல்சியஸ் குளிரில் 6 நிமிடங்கள் ஐஸ் பாத் எடுத்ததை பார்த்து ரசிகர்கள் பதறிவிட்டார்கள்.

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் மேல் சிகிச்சை பெற வசதியதாக நடிப்பில் இருந்து 6 மாதங்கள் பிரேக் எடுத்திருக்கிறார். சமந்தாவுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இந்தோனேசியாவில் இருக்கும் பாலிக்கு தன் தோழியும், மேக்கப் கலைஞருமான அனுஷ் சாமியுடன் சென்றிருக்கிறார். அங்கிருந்து தொடர்ந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சமந்தா. அதை பார்த்து வாவ், எவ்வளவு அழகான இடங்களாக இருக்கிறது. இந்த நேரத்தில் இது போன்ற இடங்களுக்கு செல்வது உங்களுக்கு நல்லது சம்மு. நல்ல காரியம் செய்து வருகிறீர்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்ஸ்டா ஸ்டோரீஸில் சமந்தா வெளியிட்ட வீடியோ தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 4 டிகிரி குளிரில் அதுவும் 6 நிமிடங்கள் ஐஸ்பாத் எடுத்திருக்கிறார் சமந்தா. அந்த வீடியோவை வெளியிட்டு தான் ரசிகர்களை அதிர வைத்துவிட்டார். ஐஸ் பாத் எடுப்பதால் தன் உடல்நலத்திற்கு நன்மை ஏற்படுவதாக கூறினார் சமந்தா. அதனால் தான் இப்படி நடுங்கும் குளிரிலும் நீரில் இறங்கியிருக்கிறார்.

சமந்தாவின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். இந்தோனேசியாவுக்கு கிளம்பும் முன்பு வேலூரில் இருக்கும் பொற்கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டினார். மேலும் ஈஷா மையத்தில் யோகாவும் செய்தார்.