அத்துமீறி தமன்னா கையை பிடித்த ரசிகர்: பின்னர் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்!

கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் கையை பிடித்து அத்துமீறி உள்ளார். பின்னர் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம்10ந் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தில், தமன்னா நடிகையாகவே நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘காவாலா’ பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். இதில் தமன்னாவின் கிளாமர் ஆட்டம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. படம் வெளியாவதற்கு முன்பே 100மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, விழா அரங்கை விட்டு வெளியில் வந்த போது, திடீரென ரசிகர் பாதுகாப்பு போலீசாரை மீறி தமன்னா அருகில் ஓடி வந்து அவரது கையை பிடித்தார். உடனே உடனிருந்த போலீசார் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆனால், ரசிகரோ ஒரே ஒரு செல்ஃபி என கெஞ்சினார். முதலில் ரசிகரைப் பார்த்து பயந்த தமன்னா, பின் ரசிகர் கெஞ்சியதால் மனம் இறங்கி பாதுகாவலர்களுக்கு அறிவுரை கூறி விலகச் செய்து, தன் ரசிகரின் ஆசைப்படி அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.