உங்களுக்கு அறிவு இல்லையா? வேலையில்லாமல் இருக்கிறீர்களா?: சமந்தா கோபம்!

சமந்தாவின் நாய்க்குட்டி நாகசைதன்யாவிடம் இருக்கிறது. நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் யே மாயா செய்சாவா, தமிழில் பானா காத்தாடி ஆகிய படங்களின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா. இந்த இரண்டு படங்களும் 2010இல் வெளியாகின. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களில் தோன்றியுள்ள சமந்தா, மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளார். பின்னர் பல ஹிட் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமாக்களில் டாப் நாயகியாக வலம் வந்த சமந்தா தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பான் நடிகையாக மாறினார். இதைத்தொடர்ந்து இவரது யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களும் இந்தியா முழுவதும் வெளியாகின.

இந்நிலையில் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதண்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். ஆனால் தொடர்ச்சியாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். திருமண விவாகரத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் கிசுகிசுக்களுக்கெல்லாம் பெரிதாக உணர்ச்சி வசப்படாத சமந்தா தொடர்ச்சியாக தனது திரைப்பயணத்தை தொடந்தார். நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமந்தா சமூக வலைத்தளத்தில் அடிக்ககடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்களில் பெரும்பாலும் நாய்க் குட்டியும் கூடவே இருக்கும். இந்நிலையில் நாகசைதன்யா தனது ஊழியர் வாங்கிய பைக்கை ஓட்டிப்பார்க்கும் வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவில் நாய்க்குட்டியும் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் நாய்க்குட்டி நாகசைதன்யாவிடம் இருக்கிறது. நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.சிலர் கேலி செய்யும் விதமாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா, “உங்களுக்கு அறிவு இல்லையா? வேலையில்லாமல் இருக்கிறீர்களா? சும்மா இருந்தால் தயவு செய்து ஏதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள் அறிவாவது வளரும்” என்று பதிவிட்டுள்ளார்.