விமானத்தில் மதுபோதையில் துன்புறுத்தல்: போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார்!

விமானத்தில் மதுபோதையில் ஒருவர் துன்புறுத்தியதாக போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன் தினம் மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பினார். அப்போது, 12 சி இருக்கையில் மதுபோதையில் அமர்ந்திருந்த நபர், 12 பி இருக்கையில் தனது அருகில் அமர்ந்துகொண்டு காரணமே இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தவறாக நடந்து கொண்டதாகவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் திவ்ய பிரபா.

இதுபற்றி விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்தபோது, அவர் இடத்தை மட்டுமே மாற்றித் தந்தார் என்றும் எனக்குத் தொல்லைக் கொடுத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். கொச்சி போலீஸார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.