உலகத்திலேயே புடவைதான் அழகான உடை: ஸ்ருதி ஹாசன்

எனக்கு மார்டன் உடை அல்லது கருப்பு நிற ஆடை உடுத்துவதில்தான் விருப்பம். ஆனால் புடவை உடுத்தும்போது நேர்மறையான (பாசிடிவ்) உணர்வு ஏற்படுகிறது என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடத்து வருகிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கோவையில் துணிக்கடை திறப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது:-

எனக்கு மார்டன் உடை அல்லது கருப்பு நிற ஆடை உடுத்துவதில்தான் விருப்பம். ஆனால் புடவை உடுத்தும்போது நேர்மறையான (பாசிடிவ்) உணர்வு ஏற்படுகிறது. உலகத்திலேயே புடவைதான் அழகான உடை. நான் தமிழ்ப்பெண்; விரைவில் தமிழ்ப்படம் எடுப்பேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

அப்பாவை இயக்க மாட்டேன். அந்தளவுக்கு எனக்கு திறமை இல்லை. அவருடன் போட்டிபோட யாராலும் முடியாது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். என்னுடைய வெற்றியில் திருப்தியடைகிறேன். ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளேன். பெண்களே எழுதி இயக்கிய படம் என்பதால் கூடுதல் சிறப்பாக இருக்கும். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது. தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.