கயல்விழிக்கு தெரியாமல் ஒரு கணவராக என்னிடம் சீமான் பேசினார்: விஜயலட்சுமி!

திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்காக வருத்தம் தெரிவிக்கிற சீமான்.. எனக்கு அவர் செய்த அநியாயத்துக்கு யார் வருத்தம் தெரிவிப்பது என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:-

இந்த வருஷம் மார்ச்சில் மதுரை செல்வம் என்பவரை வைத்து பேச்சுவார்த்தைக்கு வந்தார்.. அப்போது நான் தான் உன் கணவர்; உனக்கு எதாவது பிரச்சனைன்னா என்கிட்டதான கேட்கனும்; நான் இனிமேல் உனக்கு மாதம் ரூ 50,000 கொடுக்கிறேன்.. எனக்கு எதிராக எந்த விஷயமும் பேசாத.. நீ பேசிகிட்டு இருக்கிற விஷயம் எல்லாம் திமுககாரங்க பார்க்கும் போது எனக்கு அவமானமா இருக்குன்னு பேச்சுவார்த்தைக்கு வந்தார். அதற்கேற்ப தினமும் என்கிட்ட தினமும் கணவன் மனைவியாக பேசி வீடியோஸ் வாங்கிட்டு.. கயல்விழிக்கு தெரியாமல் இந்த அட்டகாசம் பண்ணிகிட்டு இருந்தார். இது எத்தனை நாள் நீடிக்கப் போகுது? நான் எதுக்கு பெங்களூரில் இருக்கனும்? நான் என்னைக்கு வந்து என் தமிழ் மக்களுடன் வாழப் போறேன்?ன்னு கேட்டேன்.

மதுரை செல்வம், உனக்குதான் ரூ1 கோடி கொடுத்திருக்கிறான் என பொய்யான விஷயத்தை சொல்லி மிரட்டுனாரு. அதுக்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட எங்க அக்காவை சென்னைக்கு கூட்டிட்டு வந்து புகார் கொடுத்தோம். ஆனால் மதுரை செல்வத்தை தேடுறோம் என போலீஸ் சொன்னது. இன்னைக்கு திரிஷா விஷயத்தில் எவ்வளவு சீக்கிரம் ஆக்‌ஷன் எடுக்கப்பட்டது? ஆனால் சீமான் விஷயத்தில் எனக்கு எவ்வளவு அநியாயம் நடந்துகிட்டு இருக்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இன்றைக்கு திரிஷாவின் மனது வேதனைப்பட்டா மன்சூர் அலிகானுக்காக சீமான் வருத்தம் தெரிவிப்பாராம். அப்ப சீமான் எனக்கு 12 வருஷமா செய்த அநியாயத்துக்கு யார் வருத்தம் தெரிவிப்பாங்களாம்? நடிச்சுகிட்டே இருங்கப்பா.. யாரும் எதிர்பார்க்காத மாதிரி சீமானுடன் வீடியோஸ் எல்லாத்தையும் டெலிகாட் பண்ணிட்டு சீமானின் உண்மையான முகத்தை உலகத்துக்கு காட்டி எப்படி புரட்சி செய்தேனோ அதேபோல இன்னொரு புரட்சி தமிழ்நாட்டில் பாக்கி இருக்கு. யாரும் எதிர்பார்க்காத மாதிரி என் உயிரை கொடுத்துட்டு அதுக்கு முன்னாடி 12 வருஷமா சீமான் எப்படி என் வாழ்க்கையை நாசம் செய்தார்? என்னை தமிழ்நாட்டுக்குள் வாழ விடாமல் எப்படி செய்தார்? எனக்கு நியாயம் கிடைக்காமல் என்ன செய்தார்? யாரெல்லாம் துணை போனார்கள்? என்பதை நீங்களே பார்த்தீங்க.. இனியும் வாழ முடியாது.. அவங்களை தமிழ்நாட்டு மக்களிடம் ஒப்படைத்துவிட்டு அப்புறம் இருக்கு.. நான் செத்ததுக்கு அப்புறம் மக்கள் உங்களை எல்லாம் தாக்குவாங்க பாருங்க. அன்னைக்குதான் அடங்குவீங்க.. அதை உறுதியா ஒருநாள் செய்து காட்டுவேன். இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.