என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது: ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். உலக நாயகன் கமலின் மூத்த மகளான இவர், தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். மேலும், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். அடிக்கடி தனது போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் மாடலிங் மீதுள்ள ஆர்வத்தால் ஃபேஷன் நகை மற்றும் உடையில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் எப்போதும் ரசிகர்களுடன் டச்சிலே இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஸ்ருதிஹாசன் மதுப்பழக்கம் குறித்து ஓபனாக பேசியுள்ளது சோஷியல் மீயியாவில் வைரலாகி வருகிறது. அதில், டெய்லியும் பார்டிக்கு சென்று குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் ஒருபோதும் நான் போதை பொருட்களை பயன்படுத்தியது இல்லை. நண்பர்களுடன் சென்று பார்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருக்கட்டத்தில் இதில் இருந்து வெளிவர வேண்டும் என முடிவெடுத்தேன். அதில் இருந்து என்னை பார்டிக்கு அழைக்கும் நண்பர்களை தவிர்க்க துவங்கி விட்டேன். இப்போது எட்டு ஆண்டுகளாக மது பழக்கம் இல்லாமல் இருக்கிறேன். நீங்கள் குடிக்காத சமயத்தில் பார்ட்டிகளில் மற்றவர்களை பொறுத்து கொள்வது கடினம் என தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். அதில், எனது நிதானம் பற்றி பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. வாழ்க்கை நன்றாக இருக்கிறது. கடவுள் கனிவானவர். இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.