விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சிம்பு!

வெளிநாட்டில் இருந்த நடிகர் சிம்பு தற்போது சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மறைவின்போது சூட்டிங் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்த நடிகர்கள், நடிகைகள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டில் இருந்த நடிகர் சிம்பு தற்போது சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்தின் வீட்டிற்கும் சென்று பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கும் நேரில் சென்று விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தற்போது இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன.