நயன்தாராவின் லேட்டஸ்ட் பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் லேட்டஸ்ட் பதிவு ரசிகர்களை குழப்பத்திலும் பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்து வருகின்றார். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து அங்கு படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார். முன்னணி நாயகியாக இருந்து வரும் நயன்தாராவிற்கு சமீபகாலமாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் என்னதான் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் மிகவும் குறைவான வசூலை பெற்று தோல்வி படமாக அமைந்தது. எனவே மீண்டும் தான் யார் என நிருபிக்கும் தருணத்தில் இருக்கின்றார் நயன்தாரா. எனவே மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து தரமான கம்பேக் கொடுக்கும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டா கணக்கை துவங்கிய நயன்தாரா தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது நயன்தாரா போட்ட ஒரு பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. நயன்தாரா தன் இன்ஸ்டா ஸ்டோரியில் ‘ஐ அம் லாஸ்ட்’ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாராவிற்கு என்னாச்சு? என்ன பிரச்சனை? என தெரியாமல் பதட்டத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலரோ, எதாவது விளம்பரத்திற்காக தான் நயன்தாரா இவ்வாறு செய்திருப்பார் என்றும் பேசி வருகின்றனர். நயன்தாரா நடிப்பையும் தாண்டி ஒரு நிறுவனம் துவங்கி பல தொழில்கள் செய்து வருகின்றார். எனவே அந்த தொழிலுக்கான விளம்பரமாக அல்லது படத்தின் ப்ரோமோஷமாகவும் இருக்கலாம் என்கின்றனர் ஒரு சில ரசிகர்கள்.

இதைப்போல தான் சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் நயன்தாரா விக்னேஷ் சிவனை unfollow செய்துவிட்டார். அவர்களுக்குள் பிரச்சனை என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால் அதுபோல ஒன்றும் இல்லை என அதன் பிறகு தான் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தற்போது நயன்தாராவின் இந்த பதிவும் பேசும்பொருளாக மாறியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது எக்ஸ் தள பக்கத்தில், கணவர் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.