இன்ஸ்டாவில் இருந்து ஜெயம் ரவி போட்டோக்களை நீக்கிய மனைவி!

இன்ஸ்டாகிராமில் இருந்த ஜெயம் ரவி மற்றும் மகன்களின் புகைப்படங்களை நீக்கிவிட்டார் அவர் மனைவி.

ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் காதல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆர்த்தியை பார்த்தால் இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். தன் கணவருடன் சேர்ந்து அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் ஜெயம் ரவியும், மனைவியும் பிரிந்துவிட்டார்களாம். விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்களாம் என பேச்சு கிளம்பியது.

அய்யய்யோ நல்லா இருந்த இந்த குடும்பமும் பிரிகிறதா?. இது என்ன விவாகரத்து சீசனா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் தான் ஜெயம் படம் ரிலீஸாகி 21 ஆண்டுகளானதை கொண்டாடி விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்த்தி.

ஆனால் இன்ஸ்டாகிராமில் இருந்த ஜெயம் ரவி மற்றும் மகன்களின் புகைப்படங்களை நீக்கிவிட்டார். அந்த புகைப்படங்களை ஆர்த்தி Archive செய்திருக்கிறாரா இல்லை நீக்கிவிட்டாரா என தெரியவில்லை. ஆனால் விவாகரத்து செய்தி குறித்து அறிந்ததும் ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அண்ணி, இப்படி மொத்தமாக அண்ணன், பசங்க புகைப்படங்களை நீக்கிவிட்டீர்களே.இதை வைத்தே நீங்களும், அண்ணுனும் விவாகரத்து தான் பெறப் போகிறீர்கள் என பேசுவார்களே. நீங்கள் ஏன் அந்த புகைப்படங்களை நீக்கினீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இருந்து ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கினாலும் அவரை இன்னும் பின்தொடர்கிறார் ஆர்த்தி. அதே சமயம் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் மனைவியின் புகைப்படங்களை அப்படியே வைத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, விவாகரத்து செய்தி கண்டிப்பாக வதந்தி தான் என சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.தற்போது திரையுலகை சேர்ந்தவர்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை Archive செய்து வருகிறார்கள்.அதை பார்க்கும் ரசிகர்களோ, இது விவாகரத்து தான் போலயே என பேசத் துவங்கிவிடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் விளக்கம் அளித்து விவாகரத்து எல்லாம் இல்லை என்கிறார்கள்.