உங்களை ஏதாவது ஒன்று, அணிய முடியாமல் தடுத்தால்..: த்ரிஷா!

விஜய், த்ரிஷா குறித்து பல்வேறு வதந்திகள் உலா வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

நடிகர் விஜயும், த்ரிஷாவும் இறுதியாக, லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் திடீரென்று, இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விஜய் விரைவில் தன்னுடைய மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே த்ரிஷா விஜயுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். கூடவே, த்ரிஷாவின் இன்னொரு புகைப்படமும் வைரல் ஆனது. அதில் ஒருவரின் ஷூ இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், அந்த ஷுவானது நடிகர் விஜய் உடையதுதான் என வட்டமிட்டு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் பாடகியான சுசித்ரா, விஜய் த்ரிஷாவிடம் இருந்து விலகி, சங்கீதாவிடம் இணைந்து வாழ வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கெல்லாம் மறைமுக பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை திரிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு, பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்
அந்த பதிவில், “உங்களை ஏதாவது ஒன்று, அணிய முடியாமல் தடுத்தால், அது முழுக்க முழுக்க பிற மக்களின் கருத்துகள் கொண்ட எடைதான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து அவர் பேசும் போது, “இன்றைய தினத்திற்கு த்ரிஷாவிற்கு 41 வயது ஆகிவிட்டது. நம்ம ஊர்களில், சராசரியாக இந்த வயது பெண்களுக்கு, 20 வயதில் ஒரு மகள் இருப்பார். ஆனால் இங்கு சினிமா கலைஞர்கள், தங்களது இளமையை பாதுகாத்துக் கொள்ள, தங்களது நட்சத்திர அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ள குறைந்த அளவில் உணவு எடுத்துக்கொண்டு, மிகப்பெரிய விலை கொடுத்து, தங்களுடைய இளமையை பாதுகாத்து வருகின்றனர்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் எம்ஜிஆர் ஆக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், எம்ஜிஆருக்கு எப்படி ஒரு ஜெயலலிதா இருந்தாரோ, அப்படியான இடத்தில் திரிஷா வருவார் என்று, மிகவும் கற்பனை வளத்தோடு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் நடிகர், நடிகைகளுக்கு காதல் கிசுகிசுக்களை தயாரிப்பாளர்கள்தான் பரப்புவார்கள். காரணம் என்னவென்றால், அந்த செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொள்ள, ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த நடிகர்கள் நடித்த படத்தை பார்க்க வருவார்கள்.

படத்தை பார்க்கும் அவர்கள், உண்மையிலேயே இவர்கள் காதலிக்கிறார்களோ என்று நினைத்து, மீண்டும் படத்தை பார்ப்பார்கள். இது பலமுறை, பல படங்களின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. விஜய்க்கு தற்போது 20 வயதில் மகன் இருக்கிறார். அவருக்கும் 50 வயது ஆகிவிட்டது. 50 வயது என்பது இந்த காலகட்டத்தில், ஆயுள் காலத்தில், இரண்டு பாகங்களின் முடிவு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது விஜய் இன்னும் ஒரு பாக வாழ்க்கை மட்டுமே வாழ இருக்கிறார்.

கோட் படத்தில் திரிஷா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனால், அவர் அடிக்கடி விஜயுடன் ஸ்டில்ஸ் எடுக்கிறார். பொதுவாகவே, படப்பிடிப்பில் கண்டினியூட்டி மிஸ்ஸாக கூடாது என்பதற்காக, கால், முகம் கை என பல இடங்களை போட்டோகிராஃபர்கள் படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்த படங்களை, நடிகர் நடிகைகளிடமும் கொடுப்பார்கள். அதை வைத்து இவர்கள் கேம் ஆடுகிறார்கள். அதை, இந்த சமூக வலைதள வாசிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது அவரவர்களின் சந்தோஷம்” என்று பேசினார்.