எந்த நடிகருடனும் நான் ரிலேஷன்ஷிப்பில் இல்லை: வாணி போஜன்!

ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வாணி போஜன் நடித்துள்ள ‘சட்னி சாம்பார்’ வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது. ஏற்கனவே ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டு அம்னீஷியாவில் நடித்த வாணி போஜன் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்துள்ளார். அந்த வெப்சீரிஸை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல்களுக்கு வாணி போஜன் பேட்டியளித்து வருகிறார். தன்னை பற்றி வெளியான கிசுகிசு குறித்தும் போல்டான விளக்கத்தை நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு ஆஹா எனும் சீரியலில் நடித்த வாணி போஜன் அடுத்ததாக மாயா எனும் சீரியலில் நடித்தார். விஜய் டிவி, ஜெயா டிவியை தொடர்ந்து சன் டிவியில் வெளியான தெய்வமகள் சீரியல் தான் வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் அழைக்க காரணமாகவே அமைந்தது. 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அந்த சீரியலில் அவர் நடித்துள்ளார். லக்‌ஷ்மி வந்தாச்சு சீரியலில் நடித்த அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீரா அக்காவாக பிரபலமானார் வாணி போஜன். ரித்திகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தொடர்ந்து லாக்கப், மலேசியா டு அம்னீஷியா, சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

யோகி பாபுவுடன் அவர் நடித்த சட்னி சாம்பார் வெப்சீரிஸ் இன்று வெளியானது. அஞ்சலி மற்றும் ஜெய் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் ஜெய் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. பரத்துடன் லவ் படத்தில் நடித்த போது ரொம்பவே நெருக்கமாக வாணி போஜன் இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியான போது அவருடனும் தொடர்பு படுத்தி கிசுகிசு பரவியது.

இந்நிலையில், ஆரம்பத்தில் தன்னைப் பற்றி கிசுகிசு வந்தால், என்னை பற்றி எல்லாம் எழுதுறாங்களா என ஆர்வத்துடன் படிப்பேன். ஆனால், அதன் பின்னர், எல்லாமே பொய்யாக இருப்பதால் அதை கண்டு கொள்வதில்லை. கூடவே வந்து பார்த்ததை போல கதை விடுகின்றனர் என்றும் எந்த நடிகருடனும் நான் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. அவை எல்லாமே பெரிய பொய் என ஒரேயடியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை வாணி போஜன் பேட்டியளித்துள்ளார்.