நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு அக்.19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்து விவகாரத்து வழக்கினை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதை அடுத்து மேலும் இட்லி கடை என்ற மற்றொரு படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு, இயக்கம் என முழு பிஸியாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த விவகாரத்து வழக்கினை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகள் ஐஷ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் மனம் ஒத்து பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர். இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தாலும் தனது மகன்களின் பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் ஆஜர் ஆகி அவர்களை பிரிவு பாதிக்காத வண்ணம் வைத்து கொண்டனர்.

இந்நிலையில் பரஸ்பர முறையில் இருவரும் பிரிவதாக விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் பிரிவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிரிவினை தவிர்க்க இவர்களது நண்பர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அது எந்த வித பலனையும் அளிக்க வில்லை எனவும் தெரிய வந்தது. இருவரின் உறுதியான முடிவாக விவாகரத்து இருந்தது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், வரும் அக்டோபர் 19 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.