விக்ரம் படத்தில் கமல் எழுதிய பாடல் வரிகளால் சர்ச்சை!

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ என்ற தலைப்பில் நேற்று (மே 11) வெளியானது. கமலே எழுதியுள்ள இப்பாடலில் ‘கஜானாலே காசில்லை… ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லை இப்பாலே.. சாவி இப்போ திருடன் கையில’ என்ற வரிகள் சர்ச்சையாகியுள்ளது.

தி.மு.க., ஆட்சி அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகின்றனர். இந்த பதத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. இந்நிலையில் கமலின் விக்ரம் பட பாடலில் மேலே கூறிய வரிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் இப்படத்தை வெளியிடுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. .

தற்போது அனிருத் இசையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. கேங்குடன் கமல் ஆடிப் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. அதில் பரபரப்புக்காக மத்திய அரசை விமர்சிக்கும் கருத்துக்களை நுழைத்துள்ளார் கமல்.

“கஜானாலே காசில்லே!
கல்லாலையும் காசில்லே!
காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லாலே!
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே!
சாவி திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!” என நீள்கிறது வரிகள். இது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பாடிய ஒன்றிய பாடல் குறித்து நடிகை கஸ்தூரி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல்
வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல.
ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.
கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! இவ்வாறு நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.