குலதெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா சாமி தரிசனம்!

தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேல வழுத்தூர் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோயில் விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலாகும். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் உள்ள சிவஆலயங்களில் முதன்மையான கோயிலாக விளங்கும் கும்பகோணம் மங்கலாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதலில் விநாயகர் சன்னதி, பிறகு ஆதிகும்பேஸ்வரர் சன்னதி தொடர்ந்து மங்கலாம்பிகை சன்னதியிலும் அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக, திருக்கோயிலில் இருந்து புறப்படும் முன்னர், கோயில் யானை மங்கலத்திற்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசிப்பெற்றனர்.

நடிகை நயன்தாரா இந்த ஆலயத்திற்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் குவிந்தனர்.