ஐஸ்வர்யா ராய் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது: நடிகை மீனா!

பொன்னியின் செல்வன் படம் பற்றி இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார் நடிகை மீனா.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன், கலை – தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பற்றி நடிகை மீனா இன்ஸ்டகிராமில் கூறியதாவது:-

இதற்கு மேலும் என்னால் ரகசியமாக வைத்திருக்க முடியாது. எனக்குப் பொறாமையாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவர் மீது பொறாமை கொள்கிறேன். ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக அவர் நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.