நடிகர் தேவ்மோகனுடன் பெத்தம்மா கோவிலுக்கு சென்ற சமந்தா!

நடிகர் தேவ்மோகனும், சமந்தாவும் ஹைதராபாத்தில் இருக்கும் பெத்தம்மா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் சாகுந்தலம். அந்த படத்தில் துஷ்யந்தாக நடித்திருக்கிறார் தேவ் மோகன். சாகுந்தலம் படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கிய நேரத்தில் பிப்ரவரி 17ல் சாகுந்தலம் ரிலீஸாகாது என அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். சாகுந்தலம் படத்தின் புது ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்கள். அந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை துவங்குவதற்கு முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் பெத்தம்மா கோவிலுக்கு சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டோர் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் தான் இந்த பெத்தம்மா என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலில் சமந்தாவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். சமந்தாவும், தேவ் மோகனும் கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.